உனக்குள் எழும்
தீய நெருப்பை
அணைக்காமல் விட்டால்
அந்த நெருப்பு உன்னையே அழிக்கும்
என்பது தீர்வு.
தீய நெருப்பை
அணைக்காமல் விட்டால்
அந்த நெருப்பு உன்னையே அழிக்கும்
என்பது தீர்வு.
பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையில்
நிகழ்கின்றவற்றுக்கெல்லாம்
நல்லது கெட்டது எனும்
குறியீடு உள்ளதல்லவா?
இறப்புக்கும் இடையில்
நிகழ்கின்றவற்றுக்கெல்லாம்
நல்லது கெட்டது எனும்
குறியீடு உள்ளதல்லவா?
இறந்தபின்
உடலென்பது உயிரின் வெறும்
கழிவு பொருள்தானே!
உடலென்பது உயிரின் வெறும்
கழிவு பொருள்தானே!
உனக்குள் உன்னுடைய
எண்ணங்கள் முழுதும்
முதலில்
தெளிந்து கிடக்கிறதா
எனப் பார்த்துக் கொள்.
எண்ணங்கள் முழுதும்
முதலில்
தெளிந்து கிடக்கிறதா
எனப் பார்த்துக் கொள்.
அரக்க குணம் படைத்த
உன் அச்சத்தின் முகத்தில்
உனது தோல்விகளின் ஊர்வலம்
செல்வதைப்
பார்த்திருக்கிறாயா?
உன் அச்சத்தின் முகத்தில்
உனது தோல்விகளின் ஊர்வலம்
செல்வதைப்
பார்த்திருக்கிறாயா?
எத்தனை எத்தனை
கதறல்களையும்
சாபங்களையும்
வாங்கிக்கொண்டு
முதுமையில்
தூக்கமின்றி நள்ளிரவில்
சாலைகளில் பைத்தியமாய்
அலையப் போகிறாய்?
கதறல்களையும்
சாபங்களையும்
வாங்கிக்கொண்டு
முதுமையில்
தூக்கமின்றி நள்ளிரவில்
சாலைகளில் பைத்தியமாய்
அலையப் போகிறாய்?
மனம் சொல்கின்ற வழிக்கும்
நீ செய்கின்ற வேலைக்கும்
நேரான தீர்வு உண்டெனில்
பாதைகளின் எழுத்துகளில்
பிழையிருக்காது.
நீ செய்கின்ற வேலைக்கும்
நேரான தீர்வு உண்டெனில்
பாதைகளின் எழுத்துகளில்
பிழையிருக்காது.
போதைக்கும்
பேராசைக்கும்
அடிமையாகிக் கிடக்கும்
தன்மானத்தின் கண்களை
கொஞ்சம் திறந்து பார்.
பேராசைக்கும்
அடிமையாகிக் கிடக்கும்
தன்மானத்தின் கண்களை
கொஞ்சம் திறந்து பார்.
உன் வீட்டின் வெளியே கேட்கும்
கூக்குரல்களையும்
அவலக் குரல்களையும்
சிறிது செவி சாய்த்துக் கேள்…
அது
உன் ரத்தத்தின் குரலாகவும் இருக்கலாம்…
கூக்குரல்களையும்
அவலக் குரல்களையும்
சிறிது செவி சாய்த்துக் கேள்…
அது
உன் ரத்தத்தின் குரலாகவும் இருக்கலாம்…
சில நேரங்களில்
சமாதிகூட
உடலை மண்ணில் ஒப்படைத்ததற்கான
அடையாளச் சீட்டாய்த்தான் படுகிறது.
சமாதிகூட
உடலை மண்ணில் ஒப்படைத்ததற்கான
அடையாளச் சீட்டாய்த்தான் படுகிறது.
மனம்
உனக்குள் உன்னைக்
கொண்டுபோய்
ஆழம் காண வைத்து
மகிழும் ஒரு கருவி.
உனக்குள் உன்னைக்
கொண்டுபோய்
ஆழம் காண வைத்து
மகிழும் ஒரு கருவி.
வாழ்க்கையின் பிடிமானம்
எட்டும் வரையில்
மனக் கால்களின்
ஓட்டத்திற்கு அளவிருக்காது.
எட்டும் வரையில்
மனக் கால்களின்
ஓட்டத்திற்கு அளவிருக்காது.
அழகும் அசிங்கமும்
வெவ்வேறிடமாயினும்
பிறப்பு என்பது
ஓரிடம்தானே!
வெவ்வேறிடமாயினும்
பிறப்பு என்பது
ஓரிடம்தானே!
ஒரு விடியலைத் தேடிச் செல்லும்
பறவையைப் போலத்தான்
மனிதனும்
வெவ்வேறு திசையில்
வாழ்ந்து வருகிறான்.
பறவையைப் போலத்தான்
மனிதனும்
வெவ்வேறு திசையில்
வாழ்ந்து வருகிறான்.
நம்பிக்கை அல்லது
தன்னம்பிக்கை எனும்
சிறகுகள் கொண்டு
தினமும்
வீதிகளில்
பறந்துகொண்டிருப்பது தெரிகிறதா?.
தன்னம்பிக்கை எனும்
சிறகுகள் கொண்டு
தினமும்
வீதிகளில்
பறந்துகொண்டிருப்பது தெரிகிறதா?.