Container Icon

தீபாவளி சிறப்புக் கவிதை: சுயபரிசோதனை வேண்டும்!







னக்குள் எழும்
தீய நெருப்பை
அணைக்காமல் விட்டால்
அந்த நெருப்பு உன்னையே அழிக்கும்
என்பது தீர்வு.
பிறப்புக்கும்
இறப்புக்கும் இடையில்
நிகழ்கின்றவற்றுக்கெல்லாம்
நல்லது கெட்டது எனும்
குறியீடு உள்ளதல்லவா?
இறந்தபின்
உடலென்பது உயிரின் வெறும்
கழிவு பொருள்தானே!
உனக்குள்  உன்னுடைய
எண்ணங்கள் முழுதும்
முதலில்
தெளிந்து கிடக்கிறதா
எனப் பார்த்துக் கொள்.
அரக்க குணம் படைத்த
உன் அச்சத்தின் முகத்தில்
உனது தோல்விகளின் ஊர்வலம்
செல்வதைப்
பார்த்திருக்கிறாயா?
எத்தனை எத்தனை
கதறல்களையும்
சாபங்களையும்
வாங்கிக்கொண்டு
முதுமையில்
தூக்கமின்றி நள்ளிரவில்
சாலைகளில் பைத்தியமாய்
அலையப் போகிறாய்?
மனம் சொல்கின்ற வழிக்கும்
நீ செய்கின்ற வேலைக்கும்
நேரான தீர்வு உண்டெனில்
பாதைகளின் எழுத்துகளில்
பிழையிருக்காது.
போதைக்கும்
பேராசைக்கும்
அடிமையாகிக் கிடக்கும்
தன்மானத்தின் கண்களை
கொஞ்சம் திறந்து பார்.
உன் வீட்டின் வெளியே கேட்கும்
கூக்குரல்களையும்
அவலக் குரல்களையும்
சிறிது செவி சாய்த்துக் கேள்…
அது
உன் ரத்தத்தின் குரலாகவும் இருக்கலாம்…
சில நேரங்களில்
சமாதிகூட
உடலை மண்ணில் ஒப்படைத்ததற்கான
அடையாளச் சீட்டாய்த்தான் படுகிறது.
மனம்
உனக்குள் உன்னைக்
கொண்டுபோய்
ஆழம் காண வைத்து
மகிழும் ஒரு கருவி.
வாழ்க்கையின் பிடிமானம்
எட்டும் வரையில்
மனக் கால்களின்
ஓட்டத்திற்கு அளவிருக்காது.
அழகும் அசிங்கமும்
வெவ்வேறிடமாயினும்
பிறப்பு என்பது
ஓரிடம்தானே!
ஒரு விடியலைத் தேடிச் செல்லும்
பறவையைப் போலத்தான்
மனிதனும்
வெவ்வேறு திசையில்
வாழ்ந்து வருகிறான்.
நம்பிக்கை அல்லது
தன்னம்பிக்கை எனும்
சிறகுகள் கொண்டு
தினமும்
வீதிகளில்
பறந்துகொண்டிருப்பது தெரிகிறதா?.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தாய்மைக்கு நிகரானவள்






இரவில்
தலையைக் கோதிவிட்டு
உறங்க வைக்கவும்
கால்களின் வலிக்கு
அமுக்கி விடுவதற்கும்
காலையில்
தட்டியெழுப்பி
தேநீர் அருந்த சொல்வதும்
துள்ளிக் குதித்து
குளியலறையைத் தேடி
பல்துலக்கி, குளித்துவிட்டு
அமரும்போது
சாப்பிடுங்கள் என
காலை டிபனை  எடுத்து வைத்து
விட்டுச் செல்வதும்
சாப்பிட்டு முடித்துவிட்டு
ஆடைகளை மாற்றிக் கொண்டு
பணிக்கு எடுத்துச் செல்லும்
பையைத் தேடுவதில்
இதோ என்றபடி
பைக்குள் மதிய உணவை
வைத்து
பணிக்கு அனுப்பி வைப்பதும்
மதியம் தொடர்பு கொண்டு
உணவு நிலவரங்களைக்
கேட்டறிவதிலும்
மனைவி என்பவள் -
தாய்மைக்கு நிகரானவள்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS






கலைமகள் மாத இதழ் -அக்டோபர் - 2014




நன்றி: கலைமகள்




என் அருமை மனைவியுடன்...


நன்றி: மாலை மலர்

நியூ செஞ்சுரி புத்தக நிறுவனத்தின் 60ஆம் ஆண்டு விழாவின் போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநிலக் குழு, மாநிலச் செயலாளர் திரு.தா.பாண்டியன் அவர்கள் தொழிலாளர்களை கௌரவித்து தங்க நாணயம் பரிசளித்த போது எடுத்துக்கொண்ட புகைப்படம்.

நன்றி: தினத்தந்தி
சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் மறைந்த திரு.கே.ஏ.கிருஷ்ணசாமி மற்றும் அவரது துணைவியார் மறைந்த திருமதி.புனிதவதி கிருஷ்ணசாமி அவர்களின் அச்சகத்தில் சுமார் எட்டாண்டுகளாக பணிபுரிந்தபோது, தொழிலாளர்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம்

நன்றி: ராணி


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

சுதந்திரம் என்பது ஓர் இலட்சியப் பாதை!

Happy-Independence-Day-With-Flag





காதிபத்தியத்துக்கு
எதிராக போர்க்கொடி தூக்கியதன்
பலனாய் கிட்டியது சுதந்திரம்.
போராட்டம்
போராளி என்பதற்கான
அடையாளத்தை
அன்றைய இந்திய வீரன்தாம்
வழங்கியது.
எக்காலத்திலும்
அந்நியன் புகுவதற்கு
இந்தியன் நெஞ்சில் எங்கேயும்
இடமில்லை என்பதற்கொரு சான்று.
வெள்ளைக்கார
பூட்ஸ்களின் மிதியடிகளுக்கும்
அடக்குமுறைகளுக்கும்
அல்லலுற்று, ஒடுங்கிக்கிடந்து
பெற்ற வரம் சுதந்திரம்.
வாலிபமும்
சுபகாரியங்களும்
காணாமல் போயின -
எந்த நேரம்
என்ன நடக்குமோ என
தலைமறைவு வாழ்க்கை
வாழ்ந்து
பெற்ற பொக்கிஷமல்லவா இது.
இந்தியனின் மறுபெயர் பொறுமை.
அதற்குக் கிட்டிய வெற்றிதாம்
சுதந்திரம்.
கடல்கடந்த சிறைவாழ்வு
சிறைக் கம்பிகளுக்குள்
சித்திரவதைகள்.
அத்தனை வலிகளுக்குள்ளும்
“வெள்ளையனே வெளியேறு”
எனக் கோஷம்…
தியாகிகளின் தேகமெங்கும்
வெள்ளையன் இட்ட
காயக் கோடுகள்…
தற்போது
சுதந்திரக் கொடியாய்
உயர்ந்து பறக்கிறது.
ஜனநாயகத்தின்
திறவுகோலை
தந்துவிட்டுச் சென்ற
அந்த
மகாத்மாவின்
ஆன்மாவின் கைவிரல்
ஒவ்வொரு இந்தியனின்
நெஞ்சிலும் பதியாமலில்லை!
எதிர்கால இந்தியாவின்
உருவாக்கம்
இளைஞர்களின்
இதயப் பட்டறையில்
இருந்துதாம் என்பது
தெளிவாகிறது.
– கோபால்தாசன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

விழுந்த கட்டடம்; உதிர்ந்த பூக்கள்…!

விழுந்த கட்டடம்
உதிர்ந்த பூக்கள்…
உடன் உலை வைக்கலாம்
எனக் காத்திருந்த தாய்க்கு
இடிவந்து சேர்ந்ததோ..?
பள்ளிக்குப் போன பிள்ளைக்கு
பீஸ் கட்ட பணம் வேண்டும்
நாளைதாம் கடைசி நாள்
எனச்
சொல்லி அனுப்பி விட்டு
இருந்த மனைவியின் காதிற்கு
கணவனின்
மரணச் செய்தி  வந்ததோ?
நம்பிக்கைகள் யாவும்
வேகுதடா!
உயிர்கள் ஒவ்வொன்றும்
இடிபாடிற்குள் சிக்கி
கொஞ்சம் கொஞ்சமாய்
கசியுதடா…
மண்ணோடு புதையுண்டு போனவன்
அரை உயிர் கொண்டு வருவானோ அல்லது
முழு உயிர்கொண்டு பிழைப்பானோ என
ராப்பகலாய் இமை மூடாது
நெஞ்சில் கடைசித் துளி
நம்பிக்கையோடு எதிர்பார்த்திருக்கும் ஈரவிழிகள்…
இத்தனை திங்களாய்க் கொண்ட
உழைப்பின் முடிவாய்
உயிரையும் மாய்த்தாயோ?
இடிமழைக்குப் பயந்து
ஒதுங்கிய கட்டடம்
உயிர்களைப் பறிக்குமோ?
எந்தக் குப்பை மேடானாலும்
எந்த சாக்கடையோரமானாலும்
சாக்குப் பையையே
போர்வையாகக் கொண்டு உறங்குவானே!
பகல் பணி முடித்து
இரவுப் பணி என்றாலும்
கண்ணுறக்கம் கொள்ளாது.
கடமையை முடிப்பானே!
உடைந்த ஹெல்மெட்டோடும்
கிழிந்த பூட்ஸுகளோடும்
கலவையைக் கலக்கும்போது
பாதங்களை
சிமிண்ட் பால் தின்று போன
மிச்சத்தோடும்
கால்பெருவிரலில் கல்விழுந்த
நகப்பெயர்வுகளோடும்
மறுநாளும் பணிக்கு
வந்து நிற்பானே…!
கடுமையான உழைப்பில்
சுகம் உண்டென்றும்
ஏழ்மையான வாழ்வில்
மகிழ்ச்சி உள்ளதென்றும்
உணர்த்துபவனே!
அந்தக் கட்டடத்தின் வேரினில்
உன்னுடைய வலிகளோடும்
குடும்பச் சுமைகளோடும்
உரமாகிப் போனாயே… தோழா!
முதலாளி வர்க்கம் கொண்ட
பேராசையின் உச்சம்…
ஏழையின் உயிரை
தோழமையின் சிதைவை
காவு கொண்டதடா!
- கவிஞர் கோபால்தாசன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

முகவோலை



ஒரு நூல் விமர்சனம் ஒன்றின் மூலம் அவருடைய 'அவள்' என்ற கவிதை நூலில் ஈர்க்கப்பட்டு, அந்த நூலை அவரிடமே வாங்கி படித்தேன்.
அருமை என்பதைவிட வித்தியாசமான ஒரு கோணத்தில் கவிநடையில்
காலத்திற்கேற்ற வகையில் கருத்துகளைச் சொல்லி சென்றிருக்கிறார்.
இவருடைய கவிதை யுக்தி தனித்துவமான ஒரு பாணியிலே சென்று கொண்டிருக்கிறது.


-கவிஞர் ஈழவாணி
வெளியீடு: நிவேதிதா பதிப்பகம்
செல்பேசி எண்: 9962896884, 8939387276.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

உழைப்பவன் கொள்கை உயரட்டும்!



ஓட்டைக் கூரைக்குள்ளும்
கந்தல் ஆடைக்குள்ளும்
ஏழ்மையை
மறைத்துக் கொள்பவனே…
உன்னுடைய
உழைப்பின் லட்சிய
ஈரத்தினில்
நம்பிக்கைச் செடி முளைக்கிறது.
உடலுக்குள்
குடிகொண்டிருந்த தோல்விகளும் – ஏமாற்றங்களும்
திரை விலக்கி
வெளியேறுகின்றன…
துன்பச் சேற்றினில்
புதைந்து புதைந்து
நடந்து வந்ததன் பலனாய்
வானின் கைகள் நீண்டு
உன்னைத் தூக்கிக் கொள்ளும் கணம்.
கேட்டுக் கேட்டு
ஓய்ந்துபோன
நியாயங்களுக்கெல்லாம்
உனது சங்கொலி
நிமிர்ந்து நின்று
எழுச்சி கீதம் பாடும்.
வெளிச்சத்திற்காக
தவம் கிடக்கும்  இதயங்களுக்கு
புத்தொளி பாய்ந்து
புத்துணர்ச்சியுடன் எழும் காலம்.
உழைப்பவனின் உரிமைகள்
பறிக்கப்படாத வரையில்
அவன்
எடுத்து வைக்கும்
முன்னேற்றத்தின் அடிகள்
ஒவ்வொன்றும்
சுரண்டல், சுயநலக்காரர்களின்
தோல்விக்கு
இடப்படும் இடிகள்.
உண்மைக்கும் உயர்வுக்கும்
உயிர் உண்டென வாழும்
கைகளில்
பூச்செண்டு வரும்.
தொழிலாளர் வர்க்கத்தின்
சிவப்பு சித்தாந்தம்
உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம்
செங்கொடி ஏந்தட்டும்.
உழைப்பவன் வியர்வையின்
துளி ஒவ்வொன்றும்
அணுகுண்டுகளாய் மாறி
கொத்தடிமைத்தனத்தை உடைக்கட்டும்.
பூமியில்  நிரம்பிக் கிடக்கும்
உழைப்பாளர் வர்க்கம்
நாளைய வாழ்வின் மகிழ்ச்சிக்கு
இன்றைய வெற்றியை
கட்டமைக்கும்.
- கவிஞர் கோபால்தாசன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழனுக்கொரு சரித்திரமுண்டு




தமிழன்
வசிப்பிடம் தேடிச் சென்ற தலம்
பாரதப் போர்க்களம் போல்
காட்சியளித்ததைக் கண்டோம்…
வலிமையான தேசம் இந்தியா என
மார்தட்டிக் கொள்கிறோம்.
மற்றவர்
நம் நாட்டு மக்களை
அவமானப்படுத்தியதும்,
மானபங்கம் செய்ததும்,
கருவறுக்கப்பட்டதும்,
கொன்றதுமான
காரியங்களைக் கண்டு
இன்னும் நட்புடன்
சமாதானம் பேசிக்கொண்டிருக்கிறோம்…
யாரையும்
அன்போடு வரவேற்று
உபசரிக்கும் குணம் கொண்ட
இந்தியாவின்
மனிதநேயம்
சிலர்க்கு பலவீனமாய்ப் படுகிறது
போலும்…
நேற்றைக்கும்
இன்றைக்கும் – ஏன்
நாளைக்கும்
நம் இனம் மற்றவனின்
பிடிக்குள் சிக்கி சின்னாபின்னப்பட்டு
இறக்க நேரிடும்,
அப்போதெல்லாம்
ஓர் அறிக்கை அல்லது
கண்டனக் குரல் கொடுத்து
முடங்கிப் போய்விட
வேண்டியதுதானா?
பல இலட்சம் பேர்களைப்
பறிகொடுத்துவிட்டு;
வலிகளையும், தம்
குடும்பச் சுமைகளையும்
சுமந்துகொண்டு
எங்கே
இறக்கி வைப்பதென்று
அலைந்து அல்லலுற்றுக்கொண்டிருக்கும்
நம் இனங்களை
கொல்லத்துடிப்பது யார்?
அதிகார தாக்குதல்களுக்கும்
ஒடுக்குமுறைகளுக்கும்
அடக்குமுறைகளுக்கும்
பிறந்தவர்களிடம்
ஈவிரக்கத்தைப் பார்ப்பது
கடினமல்லவா?
கொலை ஒரு பக்கம்
பாவம் ஒரு பக்கம்
எனச் சொல்வார்கள்
குற்றவாளி
நிரபராதியாவதும்
பழி சுமத்தப்பட்டவன்
குற்றவாளியாவதும்
நியாயமா? தர்மமா?
உலகத்தின் மூலைகளில்
எப்பக்கம் தவறு
நடந்தாலும் முதலில்
தமிழன் கழுத்துக்கே
கத்தி வைக்கப்படுகிறது.
அல்லது
விரட்டப்படுகிறான்?
தமிழன் வரலாறு
அறியாத
அறிவற்றவர்களுக்கு
சொல்லிப் பிரயோசனமில்லை….
தமிழன் வீழ்வதில்லை
என்கிற
தாரக மந்திரத்தில்
எந்த ஒரு மாற்றமுமில்லை…
தமிழன்
மிகச் சாதாரணமானவன்
எழுந்தால்
தீயிலும் கொடியவன்
அறிந்து கொள்ளட்டும்!
- கோபால்தாசன் கவிதை

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அஞ்சு வருச கணக்கு ஒண்ணு போடு!

            Vijay_caste

ஓட்டுப் போடும் முன்னே
கொஞ்சம் யோசி – மை
ஈரம் காய்ந்த பின்னே
பாத்தா போச்சு!

நாளெல்லாம் கஷ்டப்
பட்டு என்ன – ஒரு
பணங் காசு சேர்க்க
உண்டா பின்ன?
வயித்துப் பாடு பாத்து
நாளு போச்சு – ஒரு
கடன அடைக்க
துப்பில்லாது போச்சு!
விலைவாசி வானந்
தாண்டி போச்சு – ஒரு
பொருள வாங்க
கனவு காணலாச்சு!
ஓட்டுக்கு காசு
தருவாங்க – அது
உனக்கு வைக்கும்
ஆப்பு என புரிஞ்சுக்குங்க!
தினமணி வலைப்பூ
http://blog.dinamani.com/?p=4005
அஞ்சு வருச கணக்கு
ஒண்ணு போடு – புது
அரச ஒண்ணு
கொண்டு வந்து பாரு!
                     - கவிஞர் கோபால்தாசன்

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தெரிந்தும் தெரியாமலும்…


கோபால்தாசன்
இன்னும்
அழகழகாய் பூத்திருந்தது
அவள் முகச்செடியிலிருந்து
புன்னகைப் பூக்கள்.

அன்று, அப்போதுதாம்.
முதன்முதலாய் பார்க்கிறோமா என்கிற
ஒரு சந்தேகமும், பரவசமும்.

இதுவரை அவள் சாயலில்
வேறு யாரையோ பார்த்து
நன்றாக பழகியது போன்ற ஓர்
உள்ளுணர்வு.

நேரம் கடக்கிறது.

அவள் எதற்காக
அங்கே நிற்கிறாள் என்பது
தெரியவில்லை.

எனக்குள்
அந்த இடத்தை விட்டு கொஞ்சமும்
விலகக் கூடாது என்பதே
வேண்டுதல்.

அவள் மஞ்சள் நிறத் தேகத்திற்கேற்ற
ஆடைநிறம்.  காதோடு ஒட்டிக்கொண்டதொரு
சிவப்புநிற பிளாஸ்டிக் கம்மல்.

யாரையோ
எதிர்பார்த்து நிற்கிறாள் என்பது மட்டும்
புரிகிறது.

யாருக்காக, எதற்காக?

மழைத் தூறல் பார்வைக்கு
திரையிட்டு மறைக்க மறைக்க
அவள்
கொஞ்சம் கொஞ்சமாய்
மறைந்து கொண்டிருக்கிறாள்…

என் தோளை யாரோ
தட்டும் உணர்வில்;

திடுக்கிட்டு திரும்புகிறேன்…

அவளே தாம்.
“எப்படியிருக்கீங்க
என்னத் தெரியவில்லையா?
நான் தான் லட்சுமி அம்மா
பொண்ணு.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

காற்றினிலே வரும் கீதம்

http://www.youtube.com/watch?v=mD6pvjyWak0

வணக்கம் !
"காற்றினிலே வரும் கீதம்" என்கிற தலைப்பு கொண்ட
ஓர் ஆல்பம்க்காக நான் ஐந்து பாடல்கள் எழுதி, அவற்றில் திரையிசை பின்னணி பாடகர் திரு.திப்பு பாடிய ஒரு பாடல் காட்சி மட்டும், தற்போது " ANBAE NEE YARADI " என்கிற பெயரில் YOUTUBE ல் வெளியாகியுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

நன்றி !

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

அவள் துணைவியல்ல தோழி…. - தினமணி வலைப்பூ Dinamani Blog

அவள் துணைவியல்ல தோழி…. - தினமணி வலைப்பூ Dinamani Blog

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

தமிழனுக்கு அழிவில்லை! - தினமணி வலைப்பூ Dinamani Blog

தமிழனுக்கு அழிவில்லை! - தினமணி வலைப்பூ Dinamani Blog

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS