Container Icon


உரிமைக்கு குரல் கொடுடா தமிழா!
                                                                                          - - கோபால்தாசன்

                                                    
உயிர்வாழ நீர்கேட்டு
எங்கெங்கு அலைந்தாலும்
அவமானம் பட்டோமடா தமிழா - நம்
நிலம் மட்டும் மற்றவர் வசிப்பிடமாடா?

பாசத்துடன் நேசத்துடன்
யாருடன் பழகினாலும்
பகைகொள்ள துடிக்கிறானடா தமிழா – நம்
மனமென்ன புறம்போக்கு நிலமாடா?

மழையோடும் வெயிலோடும்
மரமடித்த நிலத்தினை
பயிர் செய்து வளர்த்தாயடா தமிழா – நம்
உழைப்பை மற்றவர் புசிப்பதற்காடா?

உணவின்றி உறக்கமின்றி
கடல்தாண்டி போனாலும்
உயிருக்கு மதிப்பேதுடா தமிழா – நம்
உயிரென்ன பறவையா மிருகமாடா?

வேற்றுமைகள் பார்க்காது
கலப்புமணம் புரிந்தபடி
உறவுகள் வளர்த்தோமடா தமிழா – நம்
சகோதரன் எங்கும் இருப்பானடா!

காய்கறி தானியங்கள்
இங்கிருந்து போனாலும்
விசுவாசம் கொள்வோராரடா தமிழா – நாம்
விழலுக்கு நீரானோமடா!

தீண்டாமை பேய்க்கு
பண்டுவம் பார்த்தது
வைக்கம் வீரரடா தமிழா – நம்
பெரியாரை மறக்கலாமாடா?

மொழிகளில் மூத்தது
தமிழே என்பது
அடித்து உரைப்போமடா தமிழா – எத்
தீயதும் கொளுத்தி எறிவோமடா!

நட்பின் மறுபெயர்
தமிழன் என்பதை
அணைத்து மகிழ்வோமடா தமிழா – நம்
இனத்தில் வேற்றுமைக்கிடமில்லையேடா!

[www.vigadan.com ல் வந்தது]

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment