தை தரும் வெற்றி!

வைத்துக் கொண்டு
நிலவை எடுத்து
தமிழ் பூமியில் வை!
எக்காலமும் அது
பொற்காலமாகும்!
வாழ்வின் உயர்வுக்கு
சூரியன் அட்சதை போடும்!
தோழா!
முடிந்தவரை இழு
அல்லது எழு
அதுவரை பூமி உன்னை
ஏந்திக் கொள்ளும்!
நிலத்தோடும் நீரோடும்
கஷ்டப்பட்டதன்
மிச்சம்தான்
இந்த சந்தோஷம்!
வா தடைகளுக்கு தீப்பந்தம் ஏந்து!
லட்சியத்தில்
தோல்விகளைக் குடி!
பின்பு
கழுத்தில் விழும்
வெற்றிமாலையைப் பார்!
-கவிஞர் கோபால்தாசன்
{ www.thinamani.com ல் வந்தது}
0 comments:
Post a Comment