Container Icon

வணக்கம்!
தினமணி-இளைஞர்மணி- இணையதளத்தில் ‘குழந்தைத் தொழிலாளர்கள்’ என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கவிதை...

குழந்தைத் தொழிலாளர்கள்
-    கோபால்தாசன்






















பள்ளிப்பாடம் கற்காது
தொழிற்கூடத்தில்
அனுபவப்பாடம் கற்க வந்த
பூ மொட்டுகள்

பிள்ளைக் கூட்டங்கள்
பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்
சமயத்தில்
இவர்கள்
சிமெண்ட்சாந்தையையோ
ஹோட்டல் பெஞ்சையையோ
துடைக்கும் அவலம்

பள்ளிக்கூட வாயிலில்
மழைக்குக்கூட ஒதுங்காத
பிஞ்சின் ஆரம்பத்திலேயே
குடும்பச் சுமைகள்...

எனினும்
வீட்டில் கணக்கற்றவர்கள்
காட்டும் வழியில் பாவம்
ஒரு புத்தகம்
வாசிக்கப்படாமலேயே
வீணாகிப் போகிறது

திருவிழாக் கடைகளில்
சந்தைகளில்
பேருந்து நெரிசல்களில்
என

தன் வயிற்றுப் பாட்டோடு
வீட்டுப் பாட்டிற்காகவும்
உழைக்கும் சிறார்களின்
பிஞ்சு கைகளில்
எத்தனை எத்தனை காய்ப்புகள்

புத்தக மூட்டையைச் சுமக்கும்
வயதில்
பழைய பிளாஸ்டிக் காகிதங்களை
பொறுக்கி விற்கும்
இச்சிறிய
இதயங்களுக்குள் சென்று
யாராவது
நிஜக்கனவினையாவது

தட்டிப்பார்த்ததுண்டா?


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment