தீண்டாமை!
- கோபால்தாசன்
அக்கால
சமஸ்தானத்திலிருந்து-
கொங்கை வரி இடுதல்
தெருமுனை தனி டம்ளர் குடிநீர்
தெருவில் செருப்பின்றி நடத்தல்
மாட்டு வண்டியில் செல்ல தடை
குடை பிடித்து செல்ல தடை
வாயில் சாணிப்பாலூற்றுதல்
கல்மாலை இடுதல் போன்ற
அடக்குமுறைகளை
கொடுங்கோன்மைகளை
கட்டுப்பாடுகளை விதித்திருந்த மண்ணில்
கலப்புத் திருமணம் தவறு
பள்ளி மற்றும் கல்லூரிகளில் சாதி
வேலை வாய்ப்புகளில் சாதி
சட்டமன்றம் மற்றும் பாராளுமன்ற
தேர்தல்களில் உறுப்பினர்களை
தேர்ந்தெடுப்பதில் கூட சாதி
ஆனால்
செய்யும் தொழில்களிலும்
வாங்கும் பொருட்களிலும்
உண்ணும் உணவுகளிலும்
குடிக்கும் குடிநீரிலும்
பயணிக்கும் பேருந்துகளிலும் மட்டும்
சாதி ஏன் பார்ப்பதில்லை?
0 comments:
Post a Comment