வணக்கம்!
விகடன் முகநூலில் நேற்று (27.08.2015) ‘பூக்காரி’ என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கவிதை...
* பூக்காரி *
- கோபால்தாசன்
அவள் நெற்றியின் நடுவே
முழுமையான சிவப்புச் சூரியனொன்று
எந்நேரமும்
குங்குமமாய் முத்திரைப் பதித்திருக்கும்.
முழுமையான சிவப்புச் சூரியனொன்று
எந்நேரமும்
குங்குமமாய் முத்திரைப் பதித்திருக்கும்.
வாயினில் வெற்றிலைச் சிவப்பும்
கிரீச் கிரீச்சென துப்பிக்கொள்ளும்
நகைப்பினில்
கிரீச் கிரீச்சென துப்பிக்கொள்ளும்
நகைப்பினில்
பூத்தொடுக்கும்
கைகளின் விரல்களின்
அபிநயங்களின் அசைவுகளுக்கேற்ப
பூக்களின் முகங்கள் கசங்காது
வசப்படும் பாங்கு
கைகளின் விரல்களின்
அபிநயங்களின் அசைவுகளுக்கேற்ப
பூக்களின் முகங்கள் கசங்காது
வசப்படும் பாங்கு
காலையிலிருந்து இரவுவரை
அவளது முகம் வாடினாலும்
பூக்களின் முகம் வாடாது
பார்த்துக்கொள்கின்ற அக்கறை
அவளது முகம் வாடினாலும்
பூக்களின் முகம் வாடாது
பார்த்துக்கொள்கின்ற அக்கறை
ஒற்றை நோட்டாய்
தருவோரிடம்
‘கொஞ்சம் சில்லறையா கொடும்மா’
என கேட்கும் தொனியில்
யாரும் இரங்கிவிடுவர்
தருவோரிடம்
‘கொஞ்சம் சில்லறையா கொடும்மா’
என கேட்கும் தொனியில்
யாரும் இரங்கிவிடுவர்
வெயிலுக்கும் மழைக்கும்
ஈடுகொடுத்து வரும் வாழ்வில்-
ஈடுகொடுத்து வரும் வாழ்வில்-
மற்றவர்
வாழ்வின் வாசம் பெற
ராப்பகலாய்
பூக்கூடையுடன்
மணம் பரப்பிக்கொண்டிருக்கும்
பூமகள் அவள்.
வாழ்வின் வாசம் பெற
ராப்பகலாய்
பூக்கூடையுடன்
மணம் பரப்பிக்கொண்டிருக்கும்
பூமகள் அவள்.
0 comments:
Post a Comment