காதல்
- கோபால்தாசன்
அது ஒரு வாதை
எதிர்பாராமல்
எதிரே வந்து மோதிவிட்டு நகைக்கும்.
களவு கொடுத்துவிட்டு
எப்போது கிட்டுமென ஏங்கித் தவிக்கும்
சுகம்...
அப்போது
மனம்பேசும் பேச்சுக்கு
உதடுகள் வாய் திறக்காது
எந்நேரமும்
உள்ளுக்குள் ஓர்
ஓட்டம் சாட்டம்...
அளவுக்கதிகமான
போதையாளனின் நிலையினை
ஒத்திருக்கும் பாங்கு
காமத்தின் சூட்சுமமும்
ரகஸிய தூண்டுதலின்படி
விழுகின்ற மனமானது
சிந்தையை ஏறெடுத்துக்கூட
பார்க்காமலேயே
தம்மை
முழுமையாய் ஈர்த்துக்கொள்ளும்
இயல்புடையது.
0 comments:
Post a Comment