Container Icon






                              17.04.2015                  

                    

                    
                       அந்த தமிழனைப் பார்த்தீற்களா?
                                                                                 













தாய் மண்ணிலே பிறந்து
வளர்ந்து
வாழ்வாதாரம் தேடிச் சென்றவன்…
வாழ்க்கையை
முன்கூட்டியே அறிந்து
திட்டமிட்டு வாழ்ந்ததனால்
பலமுயற்சிகளில்
தடைகற்களும் வந்து விழுந்தன
அவனுக்கு…
வெறும் லாபம் ஒன்றே
நோக்கமின்றி
பிறர்க்காகவும் வாழ்வதே
லட்சியம் எனக் கொள்பவன்…
விவசாயமும் நெசவும்
செய்து தந்துவிட்டு
உணவின்றியும்
உடுத்த ஆடையின்றியும்
வீதிகளில் திரிபவன்…
எங்கே சென்றாலும்
எங்கே அமர்ந்தாலும்
தன்னைத் தட்டி
ஒழுங்குப்படுத்திக்கொண்டு
நேர்மையை நெஞ்சில்
ஏந்தியபடி
படிகளில் ஏறுபவன்…
கத்தி சண்டையிலும்
வாள் வீச்சிலும்
சிலம்பிலும்
விளையாட்டுப் போட்டிகளிலும்
கைதேர்ந்தவன்…
எந்த பேச்சிலும்
தனித்து நிற்பான்
தம்மின
உரிமைக்காக குரல்கொடுப்பவன்…
உலக நாடுகளிலெல்லாம்
எங்கோ சில மூலைகளில்
தம் வாழ்வை
நிலைப்படுத்திக் கொள்வதற்காக
தன்னை
கரைத்துக்கொண்டிருப்பவன்…
அநியாயத்திற்காகவும்
அக்கிரமத்திற்காகவும்
நிகழும்
ஊர்வலங்களில் முன்னிற்பவன்…
மற்றவர்
அன்பை அல்லது நட்பை வைத்து
விரிக்கும் சூட்சும வலையினில்
முதலில் விழுபவன்…
பாவம்
கால்வயிற்று உணவுக்காக
எங்கோ
பிழைப்புத் தேடிப் போய்
கடைசியில்
உயிரை மாய்த்துக் கொள்பவனை…
எங்கேயாவது
பார்த்திருக்கிறீர்களா?
                                                                   – கோபால்தாசன்
gopaldasan

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment