இன்னும் உயரம் செல்ல வேண்டும்!
-
nfhghšjhr‹
அவர்கள்
வேதனையை
மறக்கவும்
வலிகளிலிருந்து மீளவும்
மதுவிலும்
போதை
மருந்துகளிலும் விழுந்து
தம்மைத்
தொலைத்துக்கொள்கிறார்கள்.
அவர்கள்
வீட்டில் அடைந்துகொள்வதற்கு முன்
வழியில்
ஒரு சண்டை
பிறகு
மனைவியோடு ஒரு சண்டையுடன்
அவ்விரவை
முடித்துக்கொள்கிறார்கள்...
வாங்கும் கூலியும்-
செய்யும் செலவுகளுக்கு
ஈடு கொடுக்க முடியாமல்
வட்டியிலும் கடனிலும்
பிதுங்கி நெளிவதுதாம்
வாழ்வின் சிறப்பு.
யார்
பெற்ற பிள்ளையோ
ரோட்டில் குடித்துவிட்டு
வாந்தியோடு விழுந்து
கிடக்கிறதென
முனகிக்கொண்டு செல்லும்
பாதசாரிகள்.
அடுத்த
வேளை
உணவிற்கே கேள்விக்குறியாக
கால்களற்ற நிலையில்
தரையில்
புரண்டு புரண்டு
பிச்சையெடுப்பவனைப்
பார்த்து
ஒரு வெளிநாட்டுக்காரன் ஆங்கிலத்தில்
சொல்கிறான்:
“பாவம் ... இந்தியா”
0 comments:
Post a Comment