Container Icon

வணக்கம்!
தினமணி-இளைஞர்மணி- இணையதளத்தில் ‘குழந்தைத் தொழிலாளர்கள்’ என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கவிதை...

குழந்தைத் தொழிலாளர்கள்
-    கோபால்தாசன்






















பள்ளிப்பாடம் கற்காது
தொழிற்கூடத்தில்
அனுபவப்பாடம் கற்க வந்த
பூ மொட்டுகள்

பிள்ளைக் கூட்டங்கள்
பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்
சமயத்தில்
இவர்கள்
சிமெண்ட்சாந்தையையோ
ஹோட்டல் பெஞ்சையையோ
துடைக்கும் அவலம்

பள்ளிக்கூட வாயிலில்
மழைக்குக்கூட ஒதுங்காத
பிஞ்சின் ஆரம்பத்திலேயே
குடும்பச் சுமைகள்...

எனினும்
வீட்டில் கணக்கற்றவர்கள்
காட்டும் வழியில் பாவம்
ஒரு புத்தகம்
வாசிக்கப்படாமலேயே
வீணாகிப் போகிறது

திருவிழாக் கடைகளில்
சந்தைகளில்
பேருந்து நெரிசல்களில்
என

தன் வயிற்றுப் பாட்டோடு
வீட்டுப் பாட்டிற்காகவும்
உழைக்கும் சிறார்களின்
பிஞ்சு கைகளில்
எத்தனை எத்தனை காய்ப்புகள்

புத்தக மூட்டையைச் சுமக்கும்
வயதில்
பழைய பிளாஸ்டிக் காகிதங்களை
பொறுக்கி விற்கும்
இச்சிறிய
இதயங்களுக்குள் சென்று
யாராவது
நிஜக்கனவினையாவது

தட்டிப்பார்த்ததுண்டா?


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பத்திரிகைகளில் வெளிவந்தவை













































  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நிகிதா
என்றொரு
நிக்கி...
-    கோபால்தாசன்






















நிக்கியின் சேட்டைகளில்
ஞாயிற்றுக்கிழமையில் மொட்டை மாடியில்
பத்தரைக்கு தூங்கி எழக்கூடியவன் அன்று
சீக்கிரமாகவே எழுந்துவிட்டேன்

அவள்
‘அங்கிள் கிரிக்கெட் விளையாடலாமா’
என ஒரு பந்தை கையில் வைத்து
உருட்டியபடி நின்றுகொண்டிருந்தாள்

‘விளையாட இப்ப
நேரமில்லடா அப்பறம்’ என
பாத்ரூம் போனேன்

அங்கேயும் வந்து
கதவை தட்டிக்கொண்டே
இம்சை...

‘சரி இரு வர்ரேன்’ என
அவளோடு விளையாடும்போது-

பந்து மொட்டை மாடியிலிருந்து
கீழே விழுந்தது
‘போய் எடுத்துட்டு வாரேன்’ என
ஓடினாள்

நான் அதற்குள் பல்துலக்க
ஆரம்பித்தேன்

‘அங்கிள்...’ என வந்து
முறைத்தாள்

‘வரேண்டா...’ என்றேன்

‘இப்படி பண்ணினீங்கன்னா
நா பேசவே மாட்டேன்’
என்றாள்

‘சரிடா...’ன்னு விளையாட்டு
தொடர்ந்தது

இப்போது பந்தை அவள் அடிக்க
நான் போட்டேன்
அவள் அடித்த பந்து மறுபடியும்
கீழே விழுந்தது

‘இனி நான் போமாட்டேன்’ என
அடம்பிடித்தாள்

‘ஏன்?’ என்றேன்

‘அம்மா என்னை குளிப்பாட்டிடுவாங்க’ என

கண்ணை கசக்கினாள்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வணக்கம்!
இன்றைய கல்கண்டு (21-9-2015) வார இதழில் ‘கைகள் தேடும் முதுமை’ என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கவிதை...
                                                                                                                                                                                                                                                                                                 - கோபால்தாசன்


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS