Container Icon


  •                                                                                                                     Wednesday, December 09, 2015

வணக்கம்!
‘தினமணி- இளைஞர் மணி’ இணையதளத்தினில் தற்போது (9-12-2015) ‘தமிழ்நாடா வெள்ளக்காடா’ என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளேன்...

      தமிழ்நாடா வெள்ளக்காடா...

                                                                                                                           - கோபால்தாசன்











உசுருமட்டும் போகவில்ல
உடுத்ததுணியில் நிக்கிறோம் – பேய்
மழை பெஞ்சு எங்க வாழ்க்க
முறிஞ்சு இங்கே மிதக்கிறோம்!

வீடுமுட்ட வெள்ளம் வந்து
வீதிவந்து நிக்கிறோம் – யாரு
தந்த உதவியாலோ
பாதி வயிற்றக் கழுவுறோம்!

நீரடிச்ச பொருளத் தேடி
ஓடி எங்கோ போகிறோம் – தேரு
போல காரு கொண்ட
மனிதம் கீழே பாக்குறோம்!

சாதிமத பேதமின்றி
சமத்துவமாய் உண்ணுறோம் – கோயில்
இல்ல சாமி இல்ல
இதயம் மட்டும் பாக்குறோம்!

மாடிவீடு குடிசை எல்லாம்
மண்டபத்தில் பாக்குறோம் – பிள்ளைக்
குட்டி செல்ல நாயும்
குழுமி ஒண்ணா கெடக்கிறோம்!

கதவத்தட்டி உணவு தந்த
மனித நேயம் பாக்குறோம் – ஒரு
மழையில் உலகம் கழுவப்பட்ட
மனவதிர்வை உணர்கிறோம்!

சாக்கடயா நல்ல நீரா
கொதிக்க வச்சு குடிக்கிறோம் – ஒரு
காசும் இல்ல பாலும் இல்ல
நாதியற்று கெடக்கிறோம்!

காலை இல்ல இரவு இல்ல
இருட்டில் மிரண்டு சாகிறோம் – வெளி
தொடர்பும் இல்ல ஆளும் இல்லா
வெள்ளக்காடா பாக்குறோம்!

பாம்புபூச்சி தவளை எல்லாம்
பாதம் ஏற பாக்குறோம் – அக்கம்
பக்கம் வீட்டில் இருந்து
கதறல் சத்தம் கேக்கிறோம்!

ஆசையென்ன கனவுயென்ன
அத்தனையும் தொலைக்கிறோம் – ஓர்
அன்பைக் கொண்டு உலகம் செய்ய
இதயம் வேண்டும் சேர்க்கிறோம்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வணக்கம்!
இந்தவார ‘கல்கண்டு’ வார இதழில் (14-12-2015) ‘மழைத்துளி’ என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கவிதை.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நடிகை
-    கோபால்தாசன்


உலக வரைபடத்தின் முழுதும்
அவளழகும் நடிப்பும் மிகுந்திருக்கும்

திரைப்படத்தின்
வரலாற்றினில் நடிகனை மிஞ்சி நிற்கும்
துணிச்சலும் திடகாத்திரமும்
யாரையும் வீழ்த்தக்கூடியது

ஒவ்வொரு அங்கமும்
வசனங்களுக்கேற்றபடி
ஈடுகொடுக்கும் போட்டிகளில்
எதுவும் குறைவில்லையென
கையைக் காட்டும்

உடலின் நிறத்திற்கப்பால் நிற்கும்
உடல் மொழிகள்தாம்
அவளது நடிப்பிற்கு இலக்கணம்

அவளது
அழகைத் தொழும் ரசிகர்
கூட்டத்தினில்
எஞ்சுவோரெல்லாமே

ரசனைக்கப்பாற்பட்டவரே!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நான் இரண்டு பாடல்கள் எழுதி விரைவில் வெளிவர இருக்கும் படம் நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இணைய தளம் பத்திரிகை tamil webdunia தீபாவளி சிறப்புக் கவிதை ஒன்று...

7th Nov 2015






தீபத்தினால் நன்மை உண்டாகும்

- கோபால்தாசன்


















மௌனத்தைக் கலைத்துச் சென்று
ஆகாயத்தில் வட்டமிட்டு
அழகுறச்செய்தபடி கீழே விழும்

ஒரு மனிதன் நாள் முழுக்க
கந்தகத்தில் புரண்டு புரண்டு
செய்த பட்டாசினை

இன்னொரு மனிதன்
வாங்கி வெடிக்கும் மகிழ்வில்
ஒரு குடும்பம் பசியாறுகிறது

சிரிப்பை விட்ட முகங்களும்
அப்போது சிரிக்கும்

சாலைகளின்
நெருக்கடிகளுக்குள்
அகப்பட்டுக்கொண்டிருக்கும்
பட்டாசின் மின்னல் துளிகளானது
தீபத்தின் முகத்தை
பளிச்சென படமெடுக்கிறது

பாறை மனம் கொண்டவரும்
அசுர குணம் கொண்டவரும்
தீபத்தின் முன்னே
குழந்தை மனம் கொள்வது இயல்பு

பட்டாசு புகையின் நெடிகளிலும்
மழலைகளின் குபீர் சிரிப்புகளிலும்
வீடுகள் தெருக்கள்
மயங்கிக் கிடக்கும்

அதிகாலை
சூரியக் குளியலின் நீரினில்
கெட்டவை யாவும்
அறுந்து போகும்

தேசமெங்கும் கேட்கும்
பட்டாசுகளின் ஒட்டுமொத்த
குரலோசையும்
பிரிவினை வாதத்திற்கு
கண்டனம் தெரிவிப்பதாய்

பலமிழந்து கிடக்கும்
மனித உரிமையின் உணர்வின்
மத்தியில் தீபம்
நிமிர்ந்து நின்று
எழுச்சியூட்டும் வெற்றி

கீதத்தை இசைகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வணக்கம்!
மாலைமலர் தீபாவளி சிறப்பு மலர் (6-11-2015) புத்தகத்தில் வெளிவந்திருக்கும் ஒரு கவிதை...





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS



  • Friday, November 06, 2015

நெஞ்சிற்குள் வெளிச்சம் பரவுகிறது!
-    கோபால்தாசன்













ந்த
ஒளி வெள்ளத்தை
அள்ளிப் பருகலாமெனத் தோன்றும்

புஸ்வாணம்
புஸ்பித்து பொழிவதிலிருந்து
ஆனந்தத்தை அப்படியே வாங்கி
பதுக்கலாம்

தாறுமாறாய் வெடித்து
சிதறிக் கிடக்கும் பட்டாசுகளின்
தாள்களிலிருந்து
காகிதம் தயாரிக்கலாம்

சிறார்களின்
அடிவயிற்றிலிருந்து பீறிட்டுவரும்
சந்தோச குரலானது
தீபத்தின் முகத்தில்
வெற்றியை பொருத்துகிறது

ஒவ்வொரு
பட்டாசின் வெவ்வேறான
வெடிப்புகளின்
நீளொலிக்கு ஏற்ப
இல்லம் ஒளி நடனம்
புரிகிறது

இன்னாரென்றில்லாது
எல்லாரின்
மனக்கால்களும் இறங்கி களிக்கும்
ஒளிக் களமானது
ஒருமைப்பாட்டினை விவரிக்கிறது

கதிரொளியா
நிலவொளியா என
இல்லாது காணும்
இந்திய நிலப்பரப்பினில்
ஒளி நடவு
நடந்துகொண்டிருக்கிறது

இதில்
மகிழ்ச்சியும் அழகும்
மனக்குளத்தில்
நீச்சலடித்துக் குளிக்கும்
லயிப்பில்
மனம் பட்டாம்பூச்சியாகிறது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வணக்கம்!
இன்றைய கல்கண்டு (9.11.2015) வாரஇதழில் ‘பேருந்து’ என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கவிதை...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

'ஆச்சி' என்றொரு மாபெரும் நடிகை...
                                                                 
                                                                                   
 - கோபால்தாசன்


...
ஒரு பச்சை மரத்தை
துளைத்தபடி நுழையும்
நிகழ்வு அது.
ஒரு வெளிச்சத்தை
எதிர்காலத்திற்கு திறந்து விட்டுக்கொண்டு
நெருப்பிலே
அணைந்து போனார்....

அவருடைய
பேச்சும் மூச்சும்
திரைவசனத்திலே
தோய்ந்திருந்தாலும்;
உடல் மொழியும்
முக நடிப்பும் கூட
திரைமண்ணிற்கு இட்ட உரம்

தமிழ் திரைக்கு
ராணியாகவும்
மனித நேயத்தில்
சாமியாகவும்
வாழ்ந்த அதிசயப் பிறவி

ஒரு நடிகையின்
இலக்கணமும்
இலக்கும் என்ன என்பதை
அவரிடம்தான்
டியூசன் கற்க வேண்டும்
மக்கள் வெள்ளத்தின் மீது
ஒரு சிற்றிலையாய்
மிதந்து மிதந்து சென்றது
அவரது இறுதி ஊர்வலம்

அந்த
ஊர்வலத்தின் பின்னணியில்
அவர் சென்னை தமிழிலும்
கோவை தமிழிலுமாய் பேசிய
வசனங்களின்
உச்சரிப்புகளின் எதிரொலிப்புகள்...

இனி எங்கே போய்த் தேடுவோம்
அந்த முகத்தை நடிப்பை
ஒரு வேளை
இதுவும் ஒரு நடிப்புதானா?

தொலைக்காட்சி பெட்டிகளில்
எந்த சேனலை திருப்பினாலும்
அவர் வந்து
ஞாபகப்படுத்துவாரே
ஓ! அதுதாம்
அவர் வாழ்ந்துகொண்டிருப்பதற்கான
ஆதாரமா?

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வணக்கம்!
தினமணி-இளைஞர்மணி- இணையதளத்தில் ‘குழந்தைத் தொழிலாளர்கள்’ என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கவிதை...

குழந்தைத் தொழிலாளர்கள்
-    கோபால்தாசன்






















பள்ளிப்பாடம் கற்காது
தொழிற்கூடத்தில்
அனுபவப்பாடம் கற்க வந்த
பூ மொட்டுகள்

பிள்ளைக் கூட்டங்கள்
பள்ளிக்கூடங்களுக்கு செல்லும்
சமயத்தில்
இவர்கள்
சிமெண்ட்சாந்தையையோ
ஹோட்டல் பெஞ்சையையோ
துடைக்கும் அவலம்

பள்ளிக்கூட வாயிலில்
மழைக்குக்கூட ஒதுங்காத
பிஞ்சின் ஆரம்பத்திலேயே
குடும்பச் சுமைகள்...

எனினும்
வீட்டில் கணக்கற்றவர்கள்
காட்டும் வழியில் பாவம்
ஒரு புத்தகம்
வாசிக்கப்படாமலேயே
வீணாகிப் போகிறது

திருவிழாக் கடைகளில்
சந்தைகளில்
பேருந்து நெரிசல்களில்
என

தன் வயிற்றுப் பாட்டோடு
வீட்டுப் பாட்டிற்காகவும்
உழைக்கும் சிறார்களின்
பிஞ்சு கைகளில்
எத்தனை எத்தனை காய்ப்புகள்

புத்தக மூட்டையைச் சுமக்கும்
வயதில்
பழைய பிளாஸ்டிக் காகிதங்களை
பொறுக்கி விற்கும்
இச்சிறிய
இதயங்களுக்குள் சென்று
யாராவது
நிஜக்கனவினையாவது

தட்டிப்பார்த்ததுண்டா?


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

பத்திரிகைகளில் வெளிவந்தவை













































  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS