இதயங்களின் குபீர் சிரிப்புகளின்
வெள்ளம் இங்கே
புஷ்வாணமாய் பொங்கி வழிகிறது.
நரகாசூரனைக் கொன்ற தீ
தற்போது
வாழ்ந்துகொண்டிருக்கும் சில
அசுரர்களுக்கும்
எச்சரிக்கை சின்னம்தாம்!
வாழ்வின் பிறப்புக்காக
காத்திருப்பவர்க்கு;
இலட்சிய பனிக்குடம் உடைந்து
வெற்றி பிரசவமாகும் தருணம்.
ஒவ்வொரு
இந்தியனுக்குள் இருக்கும்
தேசப்பற்றின் அடி ஆழத்திலிருந்து
வெடிக்கும் ஜனநாயகமானது
சாலைகளில்
பட்டாசு தாள்களாய்
கைகோத்து கிடக்கின்றன.
வெடிகுண்டு மனிதர்களைக்
காட்டிக் கொடுக்க வந்த
தீப்பந்தம்
சமுதாயத்தின் மத்தியில் நின்று
ருத்ர தாண்டவம் ஆடுவது
தீவிரவாதிகளிடமிருந்து
மக்களைக் காப்பாற்றவே!
மனித உயிருக்கு
உத்தரவாதம் அளிக்க வந்த தீபம்
இனி
வீட்டிற்குள் தெய்வமாய்
வழிபட வைக்கும்!
அநியாயமும்
அக்கிரமமும் கோரத் தாண்டவம்
ஆடும் பூமியில்
நெருப்பாய் கிளைத்து
பொசுக்க வந்த தீயிது!
எந்த
மூலை முடுக்குகளிலும் கேட்கும்
பட்டாசுகளின் சப்தமானது
தலைமுறைகளின் உறவுகள்
வலுவடைவதற்கான
அடையாளம்தானே!
தீபத்தின் முகம்
மக்களின் மகிழ்ச்சியின் மூலம்
எப்போதும்
பிரகாசித்துக் கொண்டிருக்கும்
என்பதை
சொல்லவும் வேண்டுமோ?
- கவிஞர் கோபால்தாசன்
0 comments:
Post a Comment