எழுதப்பட்டிருக்கும் புன்னகையில்
உன்னுடைய
சம்மதமானது என்னுள்
அடைக்கலமானது.
தனிமையின் விறகுகள்
தானாகவே தீப்பற்றிக்கொள்ளுமளவிற்கு
நீ என்ன செய்தாய்?
உன் முகவோலையில் என்
இதயத்தை வரைவதற்குள்
நான் பட்டபாடு
உனக்கெங்கே தெரியும்
அப்படியென்ன ஒரு துணிச்சல்
நீ என்னுள் சென்று
கதவடைப்பதற்கு?
கொஞ்சம் அகங்காரமும்
கொஞ்சம் மினுமினுப்பான சொற்களும்
கொண்டு என்
நெஞ்சை ஒரே மூச்சில்
குடித்துவிட்டு நிமிர்ந்தாய்…
பகலில் நீ பேசும் வார்த்தைகளையும்
இரவில் நீ உதிர்க்கும் சிரிப்புகளையும்
மொழியாக்கம் செய்ததில்;
சந்தேகமே இல்லை
நீயொரு புரியாத புதிர்தாம்.
நீ என் கனவெனும்
மலைச் சரிவுகளில் எல்லாம்
சுற்றித் திரிந்து
மகிழ்ச்சியெனும் மூலிகைகளைப் பறித்து வந்து
சாறெடுத்து தரும்
ஒரு சூட்சுமக்காரி!
காலையில் கதிரவனின்
சூடான விரல்களைப் போல் நீ
தீண்டி எழ வைக்கும் முயற்சி
எனக்குப் பிடித்திருக்கிறது.
உன் இதயத்தின் அரசாட்சியில்
எனக்கென்ன பதவி தர
தீர்மானித்திருக்கிறாய்?.
0 comments:
Post a Comment