தீபாவளி சிறப்புக் கவிதை: வாழ்வு தரும் தீபம்
By
கோபால்தாசன்
First Published : 12 November 2012 04:21 PM IST
தீபம் வந்து சோக நெஞ்சை
பறக்க விட்டது - புது
இன்பம் வந்த பாதை எங்கும் வெளிச்சம் பரவுது
மின்வெட்டைக் கூட ஒளி
மிரட்டிப் பார்க்குது - மனம்
மத்தாப்பு போல இங்கே ஒளிருகின்றது.
சாதிமத பேதமின்றி
நாடு காணுது - ஒரு
வீடுகூட பாக்கியின்றி மகிழ்ச்சி துள்ளுது.
அக்கம் பக்கம் பாத்துப் பாத்து
மக்கள் நடக்குது - பிணி
கண்டவரின் வீட்டை மட்டும் விட்டு வைக்குது!
மின்னல் போல வெட்டும் ஒளி
கையில் மின்னுது - ஏழை
பட்டாசைக் கண்டு மனம் ஊஞ்சலாடுது
பார்த்துப் பார்த்து செய்த வெடி
பற்றி வெடிக்குது - லட்ச
பணம் அங்கே இங்கே கருகிக் கிடக்குது
கந்தகப் பொடி பட்டுப் பட்டு
தோல் இற்றது - வெடி
விபத்து வந்து உசுரும்கூட பாழாய்ப் போனது
மகிழ்ச்சிப் படுத்துது - அதில்
மடிந்துபோன தொழிலாளியை நினைத்து அழுவுது!
0 comments:
Post a Comment