Container Icon

நம்ம ஊரு தலைவரு!


First Published : 13 Aug 2012 06:01:32 PM IST

விலைவாசி ஏறுதுன்னு
ஏழைவயிறு காயுதுன்னு
மேடை கீட குரல் கொடுத்தாரு - ஒரு
கட்சியிடம் போய்ச் சேர்ந்தாரு!

சாதி சொல்லி ஓட்டு வாங்கி
சட்டசப போக்கிட்டு
எங்ககுற கேக்க மறந்தாரு - எங்க
குறைகள பறக்க விட்டாரு!

மணல்கொள்ள நிலங்கொள்ள
கூறுபோட்டு விற்று விற்று
தாதாபோல வலம் வந்தாரு - ஒரு
ரெய்டுல சிறை போனாரு!

விவசாயம் பெருகணும்
விவசாயி உயரணும்
போர்க்கொடி தூக்கி நின்னாரு - மேலும்
பதவியைத் தேடிக்கொண்டாரு!

சுயநலம் போகணும்
பொதுநலம் வளரணும்
நாளெல்லாம் பேசி வந்தாரு-அவர்
தன்னலம் பாத்துக்கிட்டாரு!

சாமிகீமி என்று சொல்லி
சாதிசனம் கூட்டிவச்சி
கும்பவிழா நடத்திப்புட்டாரு-தெப்ப
 குளத்தையே விலை பேசிட்டாரு!

மனுஒண்ணு வாங்கவே
நடையா நடக்கவச்சு
பொண்ணு ஒண்ண கண்ணுவச்சாரு-அத
அஞ்சாவதா சேத்துக்கிட்டாரு!

எந்தநாடு போனாலும்
நம்ம ஊரு போல இல்ல
பெருமையா பேசிவருவாரு-இவர்
அங்கிருந்தா நாடு என்ன கூறு! 
Tuesday, August 14, 2012 8:59 PM IST

                                 (கவிஞர் கோபால்தாசன் கவிதைகள்)

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

0 comments:

Post a Comment