உன்னுடைய
உழைப்பின் லட்சிய
ஈரத்தினில்
நம்பிக்கைச் செடி முளைக்கிறது.
உழைப்பின் லட்சிய
ஈரத்தினில்
நம்பிக்கைச் செடி முளைக்கிறது.
உடலுக்குள்
குடிகொண்டிருந்த தோல்விகளும் – ஏமாற்றங்களும்
திரை விலக்கி
வெளியேறுகின்றன…
குடிகொண்டிருந்த தோல்விகளும் – ஏமாற்றங்களும்
திரை விலக்கி
வெளியேறுகின்றன…
துன்பச் சேற்றினில்
புதைந்து புதைந்து
நடந்து வந்ததன் பலனாய்
புதைந்து புதைந்து
நடந்து வந்ததன் பலனாய்
வானின் கைகள் நீண்டு
உன்னைத் தூக்கிக் கொள்ளும் கணம்.
உன்னைத் தூக்கிக் கொள்ளும் கணம்.
கேட்டுக் கேட்டு
ஓய்ந்துபோன
நியாயங்களுக்கெல்லாம்
ஓய்ந்துபோன
நியாயங்களுக்கெல்லாம்
உனது சங்கொலி
நிமிர்ந்து நின்று
எழுச்சி கீதம் பாடும்.
நிமிர்ந்து நின்று
எழுச்சி கீதம் பாடும்.
வெளிச்சத்திற்காக
தவம் கிடக்கும் இதயங்களுக்கு
தவம் கிடக்கும் இதயங்களுக்கு
புத்தொளி பாய்ந்து
புத்துணர்ச்சியுடன் எழும் காலம்.
புத்துணர்ச்சியுடன் எழும் காலம்.
உழைப்பவனின் உரிமைகள்
பறிக்கப்படாத வரையில்
அவன்
எடுத்து வைக்கும்
முன்னேற்றத்தின் அடிகள்
ஒவ்வொன்றும்
சுரண்டல், சுயநலக்காரர்களின்
தோல்விக்கு
இடப்படும் இடிகள்.
பறிக்கப்படாத வரையில்
அவன்
எடுத்து வைக்கும்
முன்னேற்றத்தின் அடிகள்
ஒவ்வொன்றும்
சுரண்டல், சுயநலக்காரர்களின்
தோல்விக்கு
இடப்படும் இடிகள்.
உண்மைக்கும் உயர்வுக்கும்
உயிர் உண்டென வாழும்
கைகளில்
பூச்செண்டு வரும்.
உயிர் உண்டென வாழும்
கைகளில்
பூச்செண்டு வரும்.
தொழிலாளர் வர்க்கத்தின்
சிவப்பு சித்தாந்தம்
உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம்
செங்கொடி ஏந்தட்டும்.
சிவப்பு சித்தாந்தம்
உலகின் மூலை முடுக்குகளிலெல்லாம்
செங்கொடி ஏந்தட்டும்.
உழைப்பவன் வியர்வையின்
துளி ஒவ்வொன்றும்
அணுகுண்டுகளாய் மாறி
கொத்தடிமைத்தனத்தை உடைக்கட்டும்.
துளி ஒவ்வொன்றும்
அணுகுண்டுகளாய் மாறி
கொத்தடிமைத்தனத்தை உடைக்கட்டும்.
பூமியில் நிரம்பிக் கிடக்கும்
உழைப்பாளர் வர்க்கம்
நாளைய வாழ்வின் மகிழ்ச்சிக்கு
இன்றைய வெற்றியை
கட்டமைக்கும்.
உழைப்பாளர் வர்க்கம்
நாளைய வாழ்வின் மகிழ்ச்சிக்கு
இன்றைய வெற்றியை
கட்டமைக்கும்.
- கவிஞர் கோபால்தாசன்