Container Icon

தீபாவளி சிறப்புக் கவிதை: வாழ்வு தரும் தீபம்

First Published : 12 November 2012 04:21 PM IST





தீபம் வந்து சோக நெஞ்சை
பறக்க விட்டது - புது
இன்பம் வந்த பாதை எங்கும் வெளிச்சம் பரவுது

மின்வெட்டைக் கூட ஒளி
மிரட்டிப் பார்க்குது - மனம்
மத்தாப்பு போல இங்கே ஒளிருகின்றது.

சாதிமத பேதமின்றி
நாடு காணுது - ஒரு
வீடுகூட பாக்கியின்றி மகிழ்ச்சி துள்ளுது.

அக்கம் பக்கம் பாத்துப் பாத்து
மக்கள் நடக்குது - பிணி
கண்டவரின் வீட்டை மட்டும் விட்டு வைக்குது!

மின்னல் போல வெட்டும் ஒளி
கையில் மின்னுது - ஏழை
பட்டாசைக் கண்டு மனம் ஊஞ்சலாடுது

பார்த்துப் பார்த்து செய்த வெடி
பற்றி வெடிக்குது - லட்ச
பணம் அங்கே இங்கே கருகிக் கிடக்குது

கந்தகப் பொடி பட்டுப் பட்டு
தோல் இற்றது - வெடி
விபத்து வந்து உசுரும்கூட பாழாய்ப் போனது

Dinamaniகாலை மாலை உழைத்த வெடி
மகிழ்ச்சிப் படுத்துது - அதில்
மடிந்துபோன தொழிலாளியை நினைத்து அழுவுது!
Follow Us Follow Us on Facebook Follow Us on Twitter Follow Us on Google+

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS