First Published : 13 Aug 2012 06:01:32 PM IST
ஏழைவயிறு காயுதுன்னு
மேடை கீட குரல் கொடுத்தாரு - ஒரு
கட்சியிடம் போய்ச் சேர்ந்தாரு!
சாதி சொல்லி ஓட்டு வாங்கி
சட்டசப போக்கிட்டு
எங்ககுற கேக்க மறந்தாரு - எங்க
குறைகள பறக்க விட்டாரு!
மணல்கொள்ள நிலங்கொள்ள
கூறுபோட்டு விற்று விற்று
தாதாபோல வலம் வந்தாரு - ஒரு
ரெய்டுல சிறை போனாரு!
விவசாயம் பெருகணும்
விவசாயி உயரணும்
போர்க்கொடி தூக்கி நின்னாரு - மேலும்
பதவியைத் தேடிக்கொண்டாரு!
சுயநலம் போகணும்
பொதுநலம் வளரணும்
நாளெல்லாம் பேசி வந்தாரு-அவர்
தன்னலம் பாத்துக்கிட்டாரு!
சாமிகீமி என்று சொல்லி
சாதிசனம் கூட்டிவச்சி
கும்பவிழா நடத்திப்புட்டாரு-தெப்ப
குளத்தையே விலை பேசிட்டாரு!
மனுஒண்ணு வாங்கவே
நடையா நடக்கவச்சு
பொண்ணு ஒண்ண கண்ணுவச்சாரு-அத
அஞ்சாவதா சேத்துக்கிட்டாரு!
எந்தநாடு போனாலும்
நம்ம ஊரு போல இல்ல

அங்கிருந்தா நாடு என்ன கூறு!
Tuesday, August 14, 2012 8:59 PM IST
(கவிஞர் கோபால்தாசன் கவிதைகள்)