Container Icon


  •                                                                                                                     Wednesday, December 09, 2015

வணக்கம்!
‘தினமணி- இளைஞர் மணி’ இணையதளத்தினில் தற்போது (9-12-2015) ‘தமிழ்நாடா வெள்ளக்காடா’ என்கிற தலைப்பில் ஒரு கவிதை எழுதியுள்ளேன்...

      தமிழ்நாடா வெள்ளக்காடா...

                                                                                                                           - கோபால்தாசன்











உசுருமட்டும் போகவில்ல
உடுத்ததுணியில் நிக்கிறோம் – பேய்
மழை பெஞ்சு எங்க வாழ்க்க
முறிஞ்சு இங்கே மிதக்கிறோம்!

வீடுமுட்ட வெள்ளம் வந்து
வீதிவந்து நிக்கிறோம் – யாரு
தந்த உதவியாலோ
பாதி வயிற்றக் கழுவுறோம்!

நீரடிச்ச பொருளத் தேடி
ஓடி எங்கோ போகிறோம் – தேரு
போல காரு கொண்ட
மனிதம் கீழே பாக்குறோம்!

சாதிமத பேதமின்றி
சமத்துவமாய் உண்ணுறோம் – கோயில்
இல்ல சாமி இல்ல
இதயம் மட்டும் பாக்குறோம்!

மாடிவீடு குடிசை எல்லாம்
மண்டபத்தில் பாக்குறோம் – பிள்ளைக்
குட்டி செல்ல நாயும்
குழுமி ஒண்ணா கெடக்கிறோம்!

கதவத்தட்டி உணவு தந்த
மனித நேயம் பாக்குறோம் – ஒரு
மழையில் உலகம் கழுவப்பட்ட
மனவதிர்வை உணர்கிறோம்!

சாக்கடயா நல்ல நீரா
கொதிக்க வச்சு குடிக்கிறோம் – ஒரு
காசும் இல்ல பாலும் இல்ல
நாதியற்று கெடக்கிறோம்!

காலை இல்ல இரவு இல்ல
இருட்டில் மிரண்டு சாகிறோம் – வெளி
தொடர்பும் இல்ல ஆளும் இல்லா
வெள்ளக்காடா பாக்குறோம்!

பாம்புபூச்சி தவளை எல்லாம்
பாதம் ஏற பாக்குறோம் – அக்கம்
பக்கம் வீட்டில் இருந்து
கதறல் சத்தம் கேக்கிறோம்!

ஆசையென்ன கனவுயென்ன
அத்தனையும் தொலைக்கிறோம் – ஓர்
அன்பைக் கொண்டு உலகம் செய்ய
இதயம் வேண்டும் சேர்க்கிறோம்!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வணக்கம்!
இந்தவார ‘கல்கண்டு’ வார இதழில் (14-12-2015) ‘மழைத்துளி’ என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கவிதை.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS