Container Icon

நடிகை
-    கோபால்தாசன்


உலக வரைபடத்தின் முழுதும்
அவளழகும் நடிப்பும் மிகுந்திருக்கும்

திரைப்படத்தின்
வரலாற்றினில் நடிகனை மிஞ்சி நிற்கும்
துணிச்சலும் திடகாத்திரமும்
யாரையும் வீழ்த்தக்கூடியது

ஒவ்வொரு அங்கமும்
வசனங்களுக்கேற்றபடி
ஈடுகொடுக்கும் போட்டிகளில்
எதுவும் குறைவில்லையென
கையைக் காட்டும்

உடலின் நிறத்திற்கப்பால் நிற்கும்
உடல் மொழிகள்தாம்
அவளது நடிப்பிற்கு இலக்கணம்

அவளது
அழகைத் தொழும் ரசிகர்
கூட்டத்தினில்
எஞ்சுவோரெல்லாமே

ரசனைக்கப்பாற்பட்டவரே!

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

நான் இரண்டு பாடல்கள் எழுதி விரைவில் வெளிவர இருக்கும் படம் நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

இணைய தளம் பத்திரிகை tamil webdunia தீபாவளி சிறப்புக் கவிதை ஒன்று...

7th Nov 2015






தீபத்தினால் நன்மை உண்டாகும்

- கோபால்தாசன்


















மௌனத்தைக் கலைத்துச் சென்று
ஆகாயத்தில் வட்டமிட்டு
அழகுறச்செய்தபடி கீழே விழும்

ஒரு மனிதன் நாள் முழுக்க
கந்தகத்தில் புரண்டு புரண்டு
செய்த பட்டாசினை

இன்னொரு மனிதன்
வாங்கி வெடிக்கும் மகிழ்வில்
ஒரு குடும்பம் பசியாறுகிறது

சிரிப்பை விட்ட முகங்களும்
அப்போது சிரிக்கும்

சாலைகளின்
நெருக்கடிகளுக்குள்
அகப்பட்டுக்கொண்டிருக்கும்
பட்டாசின் மின்னல் துளிகளானது
தீபத்தின் முகத்தை
பளிச்சென படமெடுக்கிறது

பாறை மனம் கொண்டவரும்
அசுர குணம் கொண்டவரும்
தீபத்தின் முன்னே
குழந்தை மனம் கொள்வது இயல்பு

பட்டாசு புகையின் நெடிகளிலும்
மழலைகளின் குபீர் சிரிப்புகளிலும்
வீடுகள் தெருக்கள்
மயங்கிக் கிடக்கும்

அதிகாலை
சூரியக் குளியலின் நீரினில்
கெட்டவை யாவும்
அறுந்து போகும்

தேசமெங்கும் கேட்கும்
பட்டாசுகளின் ஒட்டுமொத்த
குரலோசையும்
பிரிவினை வாதத்திற்கு
கண்டனம் தெரிவிப்பதாய்

பலமிழந்து கிடக்கும்
மனித உரிமையின் உணர்வின்
மத்தியில் தீபம்
நிமிர்ந்து நின்று
எழுச்சியூட்டும் வெற்றி

கீதத்தை இசைகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வணக்கம்!
மாலைமலர் தீபாவளி சிறப்பு மலர் (6-11-2015) புத்தகத்தில் வெளிவந்திருக்கும் ஒரு கவிதை...





  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS



  • Friday, November 06, 2015

நெஞ்சிற்குள் வெளிச்சம் பரவுகிறது!
-    கோபால்தாசன்













ந்த
ஒளி வெள்ளத்தை
அள்ளிப் பருகலாமெனத் தோன்றும்

புஸ்வாணம்
புஸ்பித்து பொழிவதிலிருந்து
ஆனந்தத்தை அப்படியே வாங்கி
பதுக்கலாம்

தாறுமாறாய் வெடித்து
சிதறிக் கிடக்கும் பட்டாசுகளின்
தாள்களிலிருந்து
காகிதம் தயாரிக்கலாம்

சிறார்களின்
அடிவயிற்றிலிருந்து பீறிட்டுவரும்
சந்தோச குரலானது
தீபத்தின் முகத்தில்
வெற்றியை பொருத்துகிறது

ஒவ்வொரு
பட்டாசின் வெவ்வேறான
வெடிப்புகளின்
நீளொலிக்கு ஏற்ப
இல்லம் ஒளி நடனம்
புரிகிறது

இன்னாரென்றில்லாது
எல்லாரின்
மனக்கால்களும் இறங்கி களிக்கும்
ஒளிக் களமானது
ஒருமைப்பாட்டினை விவரிக்கிறது

கதிரொளியா
நிலவொளியா என
இல்லாது காணும்
இந்திய நிலப்பரப்பினில்
ஒளி நடவு
நடந்துகொண்டிருக்கிறது

இதில்
மகிழ்ச்சியும் அழகும்
மனக்குளத்தில்
நீச்சலடித்துக் குளிக்கும்
லயிப்பில்
மனம் பட்டாம்பூச்சியாகிறது.


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

வணக்கம்!
இன்றைய கல்கண்டு (9.11.2015) வாரஇதழில் ‘பேருந்து’ என்கிற தலைப்பில் வெளிவந்திருக்கும் ஒரு கவிதை...


  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS