
First Published : 11 January 2013 11:04 PM IST
காவி ஆடைக்குள்
சமத்துவத்தை
பொதிந்து நிற்கும் சீலர்!
எதிர்கால இந்தியா
இளைஞர் கையிலென
சூளுரைத்த ஒரே மகான்!
ஒவ்வொரு வீட்டிலும்
பிறக்கும் குழந்தைக்கும்
விவேகானந்தரின் சொற்பொழிவுகள்
பாலுக்குப் பதிலாய்
ஊட்டப்பட்டு வருகிறது.
தமது தத்துவம்
சகோதரத்துவமாய்
கொள்கையில்
ஜனநாயகமாய்க் கொண்ட
கடைந்தெடுத்த தூய்மையான இந்தியன்!
தன்னுடைய இளமையை
முழுவதுமாய்
மனித நேயத்துக்குள்
கரைத்துக் கொண்டவர்!
அவர் விழிகளைப்
பார்த்துக் கொண்டே இருந்தால்
ஒருவித தெய்வீகச் சுடர்
நம் விழிகளின் வழியே
இதயத்திற்குள் இறங்குவதை உணரலாம்!
அவரது
முகத்தைப் பார்த்துக் கொண்டே
இருந்தால்
திகட்டாத பானமொன்றை
பருகிக் கொண்டே யிருப்பதாய்த்
தோன்றும்!
விவேகானந்தர் என்பவர்
பரமாத்மா அல்ல ஜீவாத்மா
ஒவ்வொரு இந்தியனுக்குள்ளும்
என்றும்
வாழ்ந்துகொண்டிருப்பவர்
விவேகானந்தர்
இந்தியா மட்டுமல்ல
உலகம் முழுவதும் உள்ள
மக்களுக்கெல்லாம்
முன்னுதாரணமானவர்...
அவர் ஏற்றிய
சிகாகோ பேச்சு
ஒட்டுமொத்த மக்களுக்கும்
புதியதொரு வெளிச்சமாய்
அமைந்தது என்பது உண்மை
வரலாறு இவரை
எழுதிக் கொண்டது
நிற பேதங்களெல்லாம்
அவரால்
தம்மைத் திருத்திக் கொண்டது.
இன்னும்
சொல்லப்போனால்...
விவேகானந்தரின் வழியில்
சென்றால் நாம்
வாழ்வதற்கான நன்னடத்தை
சான்றிதழை எளிதில்
பெற்றுவிடலாம்